தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூஆர் வசதி கொண்டுவரப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கோவையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் சக்கரபாணி, இம்மாத இறுதிக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் க்யூஆர் கோடு முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனக் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் அவர்கள் கொள்கைகளுக்கு எதிரான திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்பதால் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது என குற்றம் சாட்டினார்.