திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
இயற்கை உபாதை கழிக்க சென்றபோது கைவிடப்பட்ட குவாரியின் நீரில் மூழ்கி இறந்த 3 பேரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மல்லிகா(65), ஹேமலதா(16), கோமதி(13) மூவரும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பார்வதி அகரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.