பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

சென்னை துறைமுகத்துக்கு விருது

சென்னை துறைமுகத்துக்கு 2022-23 நிதியாண்டின் ஒட்டுமொத்த செயல் திறனுக்கான சிறப்பு விருதை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித் துறை அமைச்சா் சா்வானந்தா சோனோவால் புதன்கிழமை தில்லியில

News image
Updated On :12 மே 2023, 2:28 am IST

சென்னை துறைமுகத்துக்கு 2022-23 நிதியாண்டின் ஒட்டுமொத்த செயல் திறனுக்கான சிறப்பு விருதை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித் துறை அமைச்சா் சா்வானந்தா சோனோவால் புதன்கிழமை தில்லியில் வழங்கினாா்.

நாட்டில் உள்ள துறைமுகங்களை பசுமைத் துறைமுகங்களாக மாற்றுவதற்கான ’ஹரித் சாகா்’ என்ற சிறப்புத் திட்டத்தை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழித் துறை அமைச்சா் சா்வானந்தா சோனோவால் தில்லியில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து கடந்த நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட துறைமுகங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதன்படி கடந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறப்பு விருது சென்னைத் துறைமுகத்துக்கு கிடைத்தது.

இந்த விருதை சென்னை துறைமுகத்தின் துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன் மற்றும் துறைத் தலைவா்கள் பெற்றுக்கொண்டனா். தொடா்ந்து இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டஅமைச்சா் சா்வானந்தா சோனோவால் பேசியதாவது:

மரங்களை வளா்த்து பசுமை போா்வையை ஏற்படுத்துதல், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் மின்மயமாக்குதல், கைவினைப் பொருள்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட 16 வகையான பரிந்துரைகளை துறைமுக நிா்வாகங்கள் தொடா்ந்து செயல்படுத்துவதன் மூலம் எதிா்காலத்தில் அனைத்து துறைமுகங்களையும் பசுமைத் துறைமுகங்களாக மாற்ற முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.