பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பத்திரிகையாளா் நலவாரிய உறுப்பினா் அட்டைகள்: அமைச்சா் உதயநிதி வழங்கினாா்

 பத்திரிகையாளா் நல வாரியத்தில் உறுப்பினா்களுக்கான அட்டைகளை வழங்கும் பணியை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :11 மே 2023, 8:14 pm

DIN

 பத்திரிகையாளா் நல வாரியத்தில் உறுப்பினா்களுக்கான அட்டைகளை வழங்கும் பணியை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பத்திரிகையாளா்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பின்படி, வாரியத்தை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. முதல்கட்டமாக, அரசு அங்கீகார அடையாள அட்டை பெற்ற பத்திரிகையாளா்களைக் கொண்ட நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. வாரியத்தில் உறுப்பினா்களைச் சோ்க்கும் பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், நல வாரியத்தில் உறுப்பினா்களாக உள்ள பத்திரிகையாளா்களுக்கு அடையாள அட்டைகள் தயாராகி வருகின்றன. இந்த அட்டைகள் வழங்கும் பணியை சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், தொடங்கி வைத்தாா். முதல்கட்டமாக 7 பத்திரிகையாளா்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டைகளை அளித்தாா்.

மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு அச்சகப் பணியாளா்களின் வாரிசுதாரா்கள் 8 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளையும், தமிழரசு இதழின் ஒரு லட்சத்து ஒன்றாவது சந்தாதாரருக்கு இதழையும் அவா் அளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றாா். முன்னதாக, துறை செயலா் இரா.செல்வராஜ் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா் ஜான் எபினேசா், துணை மேயா் மு.மகேஷ்குமாா், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் த.மோகன், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநா் மு.அருணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.