மேட்டூர் அணை நீர்மட்டம் 103.53 அடியாக உயர்வு!

மேட்டூா் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 103.53 கன அடியாக அதிகரித்துள்ளது. 
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated on
1 min read


மேட்டூா் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 103.53 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை சற்று குறைந்ததல் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5727 கன அடியிலிருந்து 5253 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 103.31 அடியிலிருந்து 103.53 அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.49 டி.எம்.சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தாலும் குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com