டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சேலம் ரயில் நிலையத்தில் தவறி விழுந்தவரை மீட்ட ரயில்வே காவலர்

தவறி விழுந்த பயணியை, அங்குப் பணியிலிருந்த ரயில்வே காவலர் துரிதமாக மீட்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

News image
Updated On :13 மே 2023, 7:11 am

DIN

சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த பயணியை, அங்குப் பணியிலிருந்த ரயில்வே காவலர் துரிதமாக மீட்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சேலம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 10.25 மணியளவில் கரூரைச் சேர்ந்த ரவிக்குமார் தனது மனைவியுடன் பெங்களூர் -  நாகர்கோவில் செல்லும் விரைவு ரயிலில் செல்லவிருந்தார்.

கரூர் செல்வதற்காக ஓடும் வண்டியில்  எஸ்-7 பெட்டியில் ஏற முயன்ற ரவிக்குமாரின் மனைவி கீழே விழுந்ததைப் பார்த்த கணவர் ரவிக்குமார் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்க முயற்சித்த போது தவறி நடைமேடைக்கும் ரயில் வண்டிக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் விழுந்தார்.

Story image

இதனை அங்குப் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே காவலர் அஜித் துரிதமாக செயல்பட்டு, ரவிக்குமாரை தாங்கிப்பிடித்து, எந்தக் காயமும் இல்லாமல் மீட்டார். 
தற்போது இதன் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில்  வேகமாக பரவி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.