மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மாவட்டஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ. ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.உமா, இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.சங்கீதா, இ.ஆ.ப.,
சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இ.ஆ.ப., ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்பி.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சங்கரா, இ.ஆ.ப., திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.என்.பூங்கொடி, இ.ஆ.ப., கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, இ.ஆ.ப., ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.