தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆய்வு!

உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு விதிமுறைகளின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 710 பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். 
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர்: உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு விதிமுறைகளின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 710 பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கருதி தஞ்சை மாவட்டத்தில் இயங்கக்கூடிய பள்ளி பேருந்துகளின் நிலை குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். 

தஞ்சாவூர் கோட்டத்திற்குள்பட்ட 265 வாகனங்கள், பட்டுக்கோட்டை கோட்டத்திற்குள்பட்ட 240 வாகனங்கள், கும்பகோணம் கோட்டத்திற்குள்பட்ட 205 வாகனங்கள் உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு விதிமுறைகளின்படி மூன்று இடங்களில் ஆய்வு நடைபெற்றது.

இதில், பள்ளி பேருந்துகளில் அவசர வழி முறையாக செயல்படுகிறதா?, கேமரா பொருத்தப்பட்டுள்ளதா?, தீயணை உபகரணங்கள் உள்ளதா? போன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com