தமிழகத்தில் டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் தாராபுரம் டிஎஸ்பி தனராசு நாமக்கல் மாவட்ட துணை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணனை பழனி டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தவிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி டிஎஸ்பி பிரபு ராணிப்பேட்டை டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி பென்னாகரம் டிஎஸ்பி இமயவர்மன் திருச்செங்கோடு டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

திருச்செங்கோடு டிஎஸ்பி மகாலட்சுமி தருமபுரி பென்னாகரம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். பரமத்திவேலூர் டிஎஸ்பி கலையரசன் மாற்றப்பட்டு புதிய டிஎஸ்பியாக ராஜாமுரளி நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com