ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விராலிமலை: விபத்தில் 2 பேர் பலி: துக்க நிகழ்வுக்குச் சென்றுவந்தபோது நேர்ந்த சோகம்!

விராலிமலை அருகே துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்ற ஜீப், அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே ஜீப்பில் பயணித்த இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

News image
Updated On :24 மே 2023, 2:29 pm

DIN

விராலிமலை அருகே துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்ற ஜீப், அரசு பேருந்து மீது மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே ஜீப்பில் பயணித்த இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும், ஜீப்பில் பயணம் செய்த மற்றும் மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பகுதியில் 90 வயது மூதாட்டி ஒருவர் வயது மூப்பின் காரணமாக இறந்த துக்க நிகழ்வில் பங்கேற்ற அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து வாலிபர்கள் ஒரு ஜீப்பில் கொடும்பாளூருக்கு சென்றுள்ளனர்.

ஜீப் கொடும்பாளூர் மூவர் கோவில் அருகே சென்ற போது திருச்சி மாவட்டம் வேம்பனூரில் இருந்து மணப்பாறைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்ற இவர்கள் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் முன் பகுதியில் மோதியுள்ளது.

இதில் நிகழ்விடத்திலேயே பழனியப்பன்(20), சதீஷ்(18) ஆகிய இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஜீப்பில் பயணம் செய்த மூன்று பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.