தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதையடுத்து உயர்கல்விக்கு சேருவதற்கு மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 150க்கும் மேற்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 8 முதல் 22 ஆம் தேதி வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் அதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
https://collegeportal.tngasa.in என்ற இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை கல்லூரி முதல்வர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.