நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் பொறுப்பேற்பு

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image
Updated On :27 மே 2023, 12:23 pm IST

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அ. அருண் தம்புராஜ் கடலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் ஆட்சியராக இருந்த ஜானி டாம் வர்கீஸ் நாகை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில், நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரலாற்று சிறப்புமிக்க நாகை மாவட்டத்துக்கு ஆட்சியராக பொறுப்பேற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு அரசின் அனைத்து அறிவிப்புகள் மற்றும் திட்டங்களும் பொதுமக்களிடம் சென்றடைவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.

அனைத்து துறை அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு பயனடையும் வகையில் கொண்டு செல்ல முழுமையான முயற்சிகள் எடுக்கப்படும். குடிநீர் திட்டங்கள், மீன்வளத் துறை திட்டங்கள், ஊரக வளர்ச்சித் துறை திட்டங்கள், முன்னேற விளையும் மாவட்ட திட்டங்கள் ஆகியவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். 

மாற்றுத் திறனாளிகள் துறை சார்ந்த திட்டங்கள் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.