மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

காட்பாடியில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்

காட்பாடியில் ஓடும் இரயிலில் கர்ப்பிணிக்கு  பெண் குழந்தை பிறந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :1 நவம்பர் 2023, 5:33 pm IST

காட்பாடியில் ஓடும் இரயிலில் கர்ப்பிணிக்கு  பெண் குழந்தை பிறந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பேருளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (வயது 25), நிறைமாத கர்ப்பிணியான இவர் தனது குடும்பத்தினர் 13 பேருடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து விரைவில் ரயில் மூலம் ஊர் திரும்பியுள்ளனர். 

இரயில் காட்பாடி அருகே வந்த போது கல்பனாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிலர் கல்பனாவுக்கு ஓடும் இரயிலிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். அதில் கல்பனாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் இரயில் காட்பாடி இரயில் நிலையத்தை அடைந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இரயில் நிலைய மருத்துவ குழுவினர் மற்றும் காட்பாடி ரயில்வே காவல் துறையினர் மற்றும் ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கல்பனா மற்றும் அவரது குழந்தையை அருகே உள்ள பிரம்மபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். 

அங்கு தாய் மற்றும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.