கருக்கா வினோத்துக்கு நவ.15 வரை நீதிமன்றக் காவல்

ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கருக்கா வினோத்துக்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கருக்கா வினோத்
கருக்கா வினோத்

ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கருக்கா வினோத்துக்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையின் முதலாவது நுழைவு வாயில் முன்பு புதன்கிழமை (அக்.25) இரு பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசியதாக, நந்தனம் பகுதியைச் சோ்ந்த ரெளடி கருக்கா வினோத்தை காவல் துறையினர் கைது செய்தனா். 

இவர் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்றும், தற்போது பிணையில் வெளியே வந்திருந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து, கருக்கா வினோத்துக்கு 3 நாள்கள் விசாரணைக் காவல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கருக்கா வினோத்துக்கு 3 நாள்கள் விசாரணைக் காவல் முடிந்த நிலையில், இன்று மீண்டும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com