தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கனமழை: திருக்குறுங்குடி நம்பிகோயில் செல்ல பக்தர்களுக்குத் தடை

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழையால் திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணை பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
திருக்குறுங்குடி நம்பியாற்றில் வெள்ளிக்கிழமை அதிரித்த தண்ணீர்
Updated On :10 நவம்பர் 2023, 9:06 am

DIN

களக்காடு: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழையால் திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணை பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நம்பிகோயில் செல்ல பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழைபெய்து வருகிறது. இதனால் திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணை பச்சையாறு ஆகிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 

Story image

மலைப் பகுதியில் பலத்த மழையால் களக்காடு தலையணை பச்சையாற்றில் தடுப்பணையைத் தாண்டி பொங்கிப் பாயும் புதுவெள்ளம்

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, திருக்குறுங்குடி நம்பியாற்றில் தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துப் பாய்கிறது. மேலும் திருக்குறுங்குடி மலைப் பகுதியில் உள்ள திருமலைநம்பி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்திலும் தண்ணீர் செல்கிறது.

இதையடுத்து, திருமலை நம்பி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கும், நம்பியாற்றில் குளிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

இதேபோல வெள்ளிக்கிழமை காலை மழை இல்லாததால் தலையணை பச்சையாற்றில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். பிற்பகல் மழை பெய்து தலையணை பச்சையாற்றில் தடுப்பணையைத் தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்துப் பாய்வதால் தலையணையை சுற்றிப் பார்வையிட மட்டுமே வனத்துறையினர் அனுமதித்தனர்.

தலையணையில் வெள்ளம் குறைந்த பின்னரே சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.