இந்தநிலையில் அதே பகுதியில் சிந்தாமணி காலணி தெரு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சீட்டுக்கட்டு விளையாடி கொண்டும் இருந்துள்ளனர். அப்போது மது போதையில், இருந்த காரப்பிடாகை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சீட்டு விளையாடுவதை போட்டோ எடுத்து போலீசாருக்கு அனுப்புவோம் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரத்தில் அது மோதலாக மாறி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் காரப்பிடாகை கிராமத்தை சேர்ந்த 28 வயதான விஜயக்குமார் தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு திருப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.