கீழையூர் அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: இளைஞர் அடித்துக் கொலை 

சீட்டுக்கட்டு விளையாடிய கும்பலுக்கும் மது அருந்திய கும்பலுக்கும் இடையே தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக்கொலை கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங்

கீழையூர் அருகே சீட்டுக்கட்டு விளையாடிய கும்பலுக்கும் மது அருந்திய கும்பலுக்கும் இடையே தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக்கொலை கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி அடுத்த  சிந்தாமணி கிராமத்தில் உள்ள சாமியார் பண்ணை குளப்பகுதியில்  காரப்பிடாகையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது அருந்தி தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர். 

இந்தநிலையில் அதே பகுதியில் சிந்தாமணி காலணி தெரு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சீட்டுக்கட்டு விளையாடி கொண்டும் இருந்துள்ளனர். அப்போது மது போதையில், இருந்த காரப்பிடாகை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சீட்டு விளையாடுவதை போட்டோ எடுத்து போலீசாருக்கு அனுப்புவோம் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரத்தில் அது மோதலாக மாறி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் காரப்பிடாகை கிராமத்தை சேர்ந்த 28 வயதான  விஜயக்குமார் தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு திருப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற போது  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதையும் படிக்க | குமரகோட்டம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

அதனைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் அங்கிருந்து தப்பிச் சென்றதை அடுத்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும்ஷ இந்த தாக்குதல் சம்பவத்தில் காலணி தெருவை சேர்ந்த சஞ்சய், விக்னேஷ்வரன் உள்ளிட்ட 3 பேர் நாகை, திருப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனிடையே சம்பவம் தொடர்பாக மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்து 8 பேர் கைது செய்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

மேலும் சம்பவ இடத்தினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து இரு சமூகத்துக்கு இடையே பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

நாகை அருகே  இருதரப்பு இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌‌.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com