சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த 58 பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மை துறை மற்றும் வேளாண்மை துறையில் பணியாற்றும் 58 பேராசிரியர்கள் அரசு தகுதி விதிமுறைபடி பணியில் சேராமல், பணியாற்றி வந்ததாக கூறி, தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை பரிந்துரையின் பேரில் அவர்களை பணி நீக்கம் செய்து பதிவாளர் (பொறுப்பு) ஆர். சிங்காரவேலு உத்தரவு பிறப்பித்துள்ளார்.