தேசிய பத்திரிகை நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

தேசிய பத்திரிகை நாளையொட்டி பத்திரிகை, ஊடகங்களுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தேசிய பத்திரிகை நாளையொட்டி பத்திரிகை, ஊடகங்களுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர்!

எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம்.

அரசியல் அழுத்தங்களுக்கு சிலர் அடிபணியும் இக்காலத்தில், சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்து, சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம்' என்று பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16 ஆம் தேதி தேசிய பத்திரிகை நாளாக 1996 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com