மேட்டூர் அணை நீர்வரத்து 4107 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (நவ. 23) காலை 63.45அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3864கன அடியிலிருந்து வினாடிக்கு 4107கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 27:32 டிஎம்சியாக உள்ளது.