புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் மீண்டும் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் ஏற்கெனவே சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சனிக்கிழமை காலை முதல்(நவ.25) மீண்டும் இரு ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான வீடுகளிலும் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முத்துப்பட்டினத்தில் உள்ள எஸ். ராமச்சந்திரன், குழத்திரான்பட்டியில் உள்ள கரிகாலன் ஆகிய இருவரின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
மத்திய ஆயுதப் படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பகல் 1 மணியளவில் இந்த சோதனை நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
இதேபோன்று திண்டுகல்லில் உள்ள தொழிலதிபர் ரத்தினத்திற்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுதப் படை போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.