ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆளுநர் தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆளுநர் தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். 

சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஆளுநர் தரப்பில் இருந்த எந்தவிதமான பதிலும் வரவில்லை. 

இரண்டாவது முறையாக பத்து மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

பஞ்சாப் ஆளுநர் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு சாதகமாக உள்ளது. அதை வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைப்பார்கள். 

ஆளுநர் மசோதாக்களை காத்திருப்பில் வைத்திருக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எந்தவித மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டாலும், மீண்டும் நிறைவேற்றி அனுப்புவோம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com