மருத்துவமனையில் இருந்து சி.விஜயபாஸ்கர் வீடு திரும்பினார்

ப்ளூ காய்ச்சல் காரணமாக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
மருத்துவமனையில் இருந்து சி.விஜயபாஸ்கர் வீடு திரும்பினார்


திருச்சி: ப்ளூ காய்ச்சல் காரணமாக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கா், கடந்த அதிமுக ஆட்சியில் 2013-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

இந்தநிலையில், ப்ளூ காய்ச்சல் தொற்று பாதிப்பால் சனிக்கிழமை மதியம் (நவ.25) திருச்சியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியானது. 

இந்த நிலையில், சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை(நவ.26) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com