திருப்பதி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் சீரமைப்பு பணிக்கு பிறகு பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.
ராமேஸ்வரம்-திருப்பதி மார்க்கமான சித்தூர் அருகே பாகாலா என்ற இடத்தில் தண்டவாளத்தில் இன்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் விரிசலைக் கவனித்த ராமேஸ்வரம்-திருப்பதி பயணிகள் ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
நிகழ்விடத்துக்கு விரைந்த ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதன் பிறகே ராமேஸ்வரம்-திருப்பதி பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.