பழனி மலைக் கோயிலில் நாளை(நவ. 29) மட்டும் ரோப் காா் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மலைக்குச் செல்வதற்கு ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: மேட்டூர் அணை நீர்மட்டம் 65.48 அடி!
இந்நிலையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை(நவ. 29) மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாகவும் பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல மின் இழுவை ரயில், படிப்பாதை, யானைப்பாதை ஆகிய வழிகளை பயன்படுத்துமாறும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.