புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மஞ்சப்பையில் கோப்புகளை எடுத்துச் செல்லும் காவல்துறையினர்! - சுப்ரியா சாகு ஐஏஎஸ் ட்வீட்

சென்னை மாநாட்டிற்கு வரும் காவல்துறையினர், கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து வரும் புகைப்படங்களை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :4 அக்டோபர் 2023, 6:08 am

DIN

சென்னை மாநாட்டிற்கு வரும் காவல்துறையினர், கோப்புகளை மஞ்சப்பையில் எடுத்து வரும் புகைப்படங்களை சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு தனது ட்விட்டர் பதிவில், 'சென்னையில் நடந்து வரும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வன அலுவலர்களின் மாநாட்டிற்கு வரும் காவல்துறையினரிடம் உள்ள முக்கிய கோப்புகளை சுமக்கும் இந்த மஞ்சப்பை, பிளாஸ்டிக் பைகளின் தாக்குதலில் இருந்து புவியை பாதுகாக்க ஒரே வழி. புவிக்கு உகந்த மஞ்சப்பையை அனைவரும் பயன்படுத்த உறுதி கூறுங்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

Story image

சென்னையில் இன்று 2- வது நாளாக மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வன அலுவலர்களின் மாநாடு நடைபெற்று வருகிறது. 

நேற்று கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும், மஞ்சப்பை பயன்படுத்துவதன் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்' என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.