மகாளய அமாவாசை: மேல்மலையனூருக்கு 380 சிறப்புப் பேருந்துகள்!

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து மேல்மலையனூருக்கு அக்டோபர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) 380 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
கோப்புப் படம்
கோப்புப் படம்

விழுப்புரம்: மகாளய அமாவாசையையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து மேல்மலையனூருக்கு அக்டோபர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) 380 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இக்கோட்டத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.எஸ். ராஜ்மோகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புரட்டாசி மாத அமாவாசையன்று (மகாளய அமாவாசை) விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரிலுள்ள அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால், பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் பல்வேறு நகரங்களிலிருந்து அக்டோபர் 14-ஆம் தேதி 380 சிறப்புப் பேருந்துகளை இயக்கவுள்ளது.

சென்னையிலிருந்து 210 பேருந்துகள், தாம்பரத்திலிருந்து 40, காஞ்சிபுரத்திலிருந்து 30, வேலூரிலிருந்து 15, விழுப்புரத்திலிருந்து 20, புதுச்சேரியிலிலிருந்து 20, திருவண்ணாமலையிலிருந்து 20, திருக்கோவிலூரிலிருந்து 10, கள்ளக்குறிச்சியிலிருந்து 5, ஆரணி/ஆற்காடு/திருப்பத்தூரிலிருந்து 10 என மொத்தமாக 380 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், பேருந்து இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com