தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீலகிரியில் ரூ.25.14 கோடியில் வரையாடு திட்டம்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

நீலகிரியில் ரூ.25.14 கோடியில் வரையாடு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை(அக்.12) தொடங்கி வைக்கிறார்.

News image
Updated On :12 அக்டோபர் 2023, 4:02 am

DIN

சென்னை: நீலகிரியில் ரூ.25.14 கோடியில் வரையாடு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை(அக்.12) தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்பான பன்னாட்டு அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வழங்விடங்களை மேம்படுத்துவதற்காக, நாட்டிலேயே முதல்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை ரூ.25.14 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

அதன்படி, ஆண்டுதோறும் அக்டோபர் 7 ஆம் தேதி வரையாடு நாள் என அனுசரித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. 

இந்த நிலையில், வனத்துறை சார்பில் வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நீலகரி வரையாடு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.