தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

செங்கம் அருகே லாரி - கார் நேருக்குநேர் மோதல்: 7 பேர் பலி

செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 7 பேர் பலியானார்கள்.  

News image
Updated On :15 அக்டோபர் 2023, 7:31 am

DIN

செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை காரும், லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 7 பேர் பலியானார்கள். 
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கார் ஒன்றில் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவிட்டு கர்நாடகத்துக்கு காரில் திரும்பினர். அப்போது இவர்கள் சென்ற கார் செங்கம் அருகே திருவண்ணாமலை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் திடீரென எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 
இந்த விபத்தில்  சிறுவர்கள் உட்பட 7 பேர் பலியானார்கள். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கால்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். 
இதனிடையே செங்கம் அருகே நிகழ்ந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.