சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
எம்.புதுப்பட்டியை அடுத்த ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்து நிகழ்ந்த அறையில் 15 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: கதாநாயகியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம்!
தயாரித்த பட்டாசுகளை பரிசோதித்து பார்த்தபோது, இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.