குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் இன்று (அக்.18) ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா் மற்றும் கூடலூரில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழைப் பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் தண்டவாளத்தின் மீது விழுந்தன. இதனால் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு புறப்பட்ட மலை ரயில் கல்லாறு அருகே நிறுத்திவைக்கப்பட்டது.
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.