கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆயுத பூஜை: அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது!

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 
Published on

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

தமிழ்நாட்டில் அக்டோபா் 21, 22 ஆம் தேதிகளில் சனி, ஞாயிறு, 23 ஆம் தேதி ஆயுத பூஜை, 24 ஆம் தேதி விஜயதசமி என தொடா் விடுமுறையையொட்டி  சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

அதன்படி நாளை(அக். 20) முதல் 23 ஆம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால் இந்த நாள்களில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துனர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மீறி விடுப்பு எடுத்தால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com