
கன்னியாகுமரியில் நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாள். இதனைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ம் தேதி கன்னியாகுமரி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டம் தோன்ற முதல் காரணமாக இருந்த தியாகி மார்ஷல் நேசமணியை அப்பகுதி மக்கள் குமரி தந்தை என அழைக்கின்றனர்.
எனவே, இந்த தினத்தை நினைவுப்படுத்தும் வகையில், நவம்பர் 1-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.