ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காவல்துறையினரின் தியாகங்களுக்கு வீர வணக்கங்கள்: மு.க. ஸ்டாலின்

காவலர் வீர வணக்க நாளையொட்டி, காவல்துறையினரின் தியாகங்களுக்கு வீர வணக்கங்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
காவலர் வீர வணக்க நாளில் டிஜிபி சங்கர் ஜிவால் மரியாதை
Updated On :21 அக்டோபர் 2023, 9:00 am

DIN

காவலர் வீர வணக்க நாளையொட்டி, காவல்துறையினரின் தியாகங்களுக்கு வீர வணக்கங்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

1959ல் லடாக் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும் சீனப் படைக்கும் இடையே ஏற்பட்ட போரில், இந்திய காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். அவர்களது தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அக். 21 ஆம் தேதி காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. காவல்துறையில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு இன்று காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது

காவலர் வீர வணக்க நாளை தலைவர்கள் பலரும் நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

அந்தவகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கை, நாட்டின் வளர்ச்சிக்காகத் தம் உயிரையும் பணையம் வைத்து நம்மைப் பாதுகாக்கும் கடமையுணர்வுமிக்க காவல்துறையினரின் தியாகங்களுக்கு காவலர் வீர வணக்க நாளில் எனது வீரவணக்கங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.