மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பா. வேல்துரை மறைவு

சேரன்மகாதேவி பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பா. வேல்துரை (73) செவ்வாய்க்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

News image
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பா. வேல்துரை
Updated On :24 அக்டோபர் 2023, 10:19 am

DIN

சேரன்மகாதேவி: சேரன்மகாதேவி பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் பா. வேல்துரை (73) செவ்வாய்க்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஒன்றியம், திருவிதத்தான்புள்ளி ஊராட்சி கங்கனாங்குளம் கிராமத்தில் 17.09.1950இல் பா. வேல்துரை பிறந்தார். இவரது தந்தை பாபநாசபெருமாள் திருவிதத்தான்புள்ளி ஊராட்சியில் 4 முறை தலைவராக இருந்துள்ளார். 

பிஎஸ்சி பட்டதாரியான வேல்துரை, 1980இல் காங்கிரஸ் கட்சியின் சேரன்மகாதேவி வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார். அதன் பின்னர், 1989இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டபோது சேரன்மகாதேவி பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.  

பின்னர், 1996-இல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரானார். 2006இல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு சேரன்மகாதேவி தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2011-இல் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட வேல்துரை தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்பு வகித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த வேல்துரை, செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு முத்துக்கனி என்ற மனைவி, சௌந்தர்யா, ஷீலா, அனிதா ஆகிய 3 மகள்களும், வி.பி. துரை என்ற மகனும் உள்ளனர். 
அவரது இறுதிசடங்கு சொந்த ஊரான கங்கனாங்குளத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. தொடர்புக்கு 94431 71111.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.