நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நவ. 1-இல் நடைபெறுவதையொட்டி, நவ. 1-ஆம் தேதி நாமக்கல் தாலுகா அளவிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்தார்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு, 14 ஆண்டுகள் கழித்து தற்போது நவ. 1-ஆம் தேதி காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு விழாவும் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க | வாடகைக்கு குடி வருவோரின் விவரங்களை சேகரிக்க வேண்டும்
இதனையொட்டி, நாமக்கல் தாலுகா அளவில் மட்டும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ச.உமா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.