திருப்பூரில் இளம் பெண் கழுத்தை அறுத்துக் கொலை: காதலனும் தற்கொலை முயற்சி

திருப்பூரில் இளம் பெண்ணை கழுத்து அறுத்துக் கொலை செய்து விட்டு காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் இளம் பெண் கழுத்தை அறுத்துக் கொலை: காதலனும் தற்கொலை முயற்சி
Published on
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூரில் இளம் பெண்ணை கழுத்து அறுத்துக் கொலை செய்து விட்டு காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்தவர் சத்தியஸ்ரீ (20). இவர் திருப்பூர் குமார் நகர் 60 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் (25) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், சத்தியஸ்ரீ வழக்கம்போல் வெள்ளிக்கிழமை பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நரேந்திரன் அவருடன் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யாஸ்ரீயின் கழுத்தை அறுத்துள்ளார். இதன் பின்னர் நரேந்திரனும் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சத்தியஶ்ரீயைப் பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்தாகத் தெரிவித்தார். 

திருப்பூரில் பட்டப்பகலில் இளம் பெண் கத்தியால் அறுத்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com