கோப்புப்படம்
கோப்புப்படம்

குற்றாலம் அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி!

குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக இன்று தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Published on

குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக இன்று தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது.

குற்றாலம் மலைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர்வரத்து சற்று அதிகரித்தது.

இந்த நிலையில், நீா்வரத்து சற்று தணிந்ததால் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com