மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகராஜா கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்! 

ஆவணி மாத 4ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

News image
Updated On :10 செப்டம்பர் 2023, 7:11 am

DIN

நாகர்கோவில்: ஆவணி மாத 4ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் நாக தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. நாக தோஷம் , கால சர்ப்ப தோஷம், போன்ற தோஷம் உள்ளவர்களும், நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருப்பவர்களும் இந்த கோயிலில் உள்ள நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

Story image

இந்த கோயிலில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வார்கள். குறிப்பாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகரை வழிபாடு செய்வார்கள். செப்.10 ஆம் தேதி ஆவணி 4 ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. நாகராஜாவை தரிசிக்க காலையிலேயே பக்தர்கள் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை தரிசித்தனர்.

மேலும், பக்தர்கள் கோயிலின் முன்புறமுள்ள நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்தும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,  தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.

கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வாங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.