எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: செப்.15-க்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :11 செப்டம்பர் 2023, 6:11 am

DIN

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் அமைச்சா் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமாா் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, ஆவணங்கள் கடந்த ஆக. 12-ஆம் தேதி அமலாக்கத்துறையால் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடா்ந்து இந்த வழக்கின் விசாரணை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான முறைகேடு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு ஆக. 14-ஆம் தேதி மாற்றப்பட்டது.

இதனிடையே, செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், வழக்கை எம்பி, எம்எல்ஏ வழக்குகளுக்கான நீதிமன்றத்துக்கு மாற்றியது தவறு எனவும், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா் எம்.பி., எம்.எல்.ஏக்களாக இருந்தாலும், அந்த வழக்கை விசாரிக்க முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஆவணங்களை உடனடியாக மாற்ற உத்தரவிட்டது. 

உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து ஜாமீன் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிபதி எஸ்.அல்லி முன் செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞா் அருண் முறையிட்டாா்.

இதனை ஏற்ற நீதிபதி, மனுவாக தாக்கல் செய்ய அனுமதி வழங்கினாா். அதைத் தொடா்ந்து, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பாக இன்று(திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

தொடர்ந்து, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.