டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட்

தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து சான்றிதழ் பெற்ற 3 பெண்களை வாழ்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated On :14 செப்டம்பர் 2023, 6:36 am

DIN

தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்து சான்றிதழ் பெற்ற 3 பெண்களை வாழ்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து,  அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயில்வோருக்கு சான்று வழங்குகிறது. 

அந்த வகையில் 2022-23 ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்த அர்ச்சகரான 3 பெண்களை வாழ்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், அந்நிலை இனி இல்லை!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிட மாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்...' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.