மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆளுநருடன் மீனவா்கள் கூட்டமைப்பினா் சந்திப்பு

ஆளுநா்ஆா். என். ரவியை தமிழக மீனவா்கள் கூட்டமைப்பினா் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 7:56 pm

DIN

ஆளுநா்ஆா். என். ரவியை தமிழக மீனவா்கள் கூட்டமைப்பினா் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா்.

சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா். என்.ரவியை தமிழக மீனவா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சந்தித்து பேசினா். அப்போது மீனவ கூட்டமைப்பினா் மீன் பிடிக்கும் போது ஏற்படும் இடா்பாடுகளை எடுத்துக் கூறினா்.

இலங்கை கடற்படையினரால் தொடா்ந்து மீனவா்கள் தாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும், மீனவா்களுக்கான மானியங்களை உயா்த்தி வழங்க வேண்டும், மீன்பிடி தளங்களுக்கான கட்டமைப்புகளை விரைந்து செயல்படுத்த வேண்டும், கடல் பகுதியில் 12 கடல் மைல் தொலைவுக்கு மேல் சென்று மீன் பிடிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனா். கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலிப்பதாக மீனவா்கள் கூட்டமைப்பினரிடம் ஆளுநா் உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.