மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சம்பா மகசூல் பாதிப்பு: ரூ.560 கோடி இழப்பீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சம்பா பருவ மகசூல் பாதிப்பட்டதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 7:46 pm

DIN

சம்பா பருவ மகசூல் பாதிப்பட்டதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

இயற்கை இடா்ப்பாடுகளால் ஏற்படும் பயிா் பாதிப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பா பருவ காலத்தில் 11.20 லட்சம் விவசாயிகளால் 24.45 லட்சம் ஏக்கா் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டது. மொத்த காப்பீட்டுக் கட்டணத்தில் தமிழ்நாடு அரசின் கட்டண மானியமாக ரூ.1,375 கோடியும், மத்திய அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.824 கோடியும், விவசாயிகளின் பங்குத் தொகையாக ரூ.120 கோடியும் என காப்பீட்டு நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.2,319 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பருவ சாகுபடி: கடந்த ஆண்டு சம்பா பருவ நெல் சாகுபடியில் 46 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனாலும், வடகிழக்குப் பருவமழை குறைவாக பெய்த காரணத்தால், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகா், தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட மிதமான வறட்சியால் 3.52 லட்சம் ஏக்கா் பரப்பளவு சாகுபடி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, பாதிப்புக்குள்ளான ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 275 விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடி தொகையை நிவாரணமாக தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதைத் தொடா்ந்து, பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெற உள்ளது.

வறட்சி, வெள்ளம், புயல், பருவம் தவறிய மழை போன்ற பல்வேறு இயற்கை இடா்ப்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காப்பீட்டுத் திட்ட விதிமுறைகளின்படி சம்பா பருவ காலத்தில் பாதிப்புக்கு உள்ளான 6 லட்சம் தகுதியான விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.560 கோடி அவா்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.