எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அமித்ஷாவை சந்திக்க தில்லியில் முகாமிட்டுள்ள அதிமுக நிர்வாகிகள்

அதிமுக-தமிழக பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் தில்லியில் முகாமிட்டுள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :22 செப்டம்பர் 2023, 5:41 pm

DIN

அதிமுக-தமிழக பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் தில்லியில் முகாமிட்டுள்ளனர். 

பெரியாா் ஈவெரா, அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தொடா்ந்து விமா்சிப்பதாகக் கூறி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிவித்தாா். கட்சித் தலைமையின் முடிவின்படியே அறிவிப்பதாகவும் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, செல்லூா் ராஜூ உள்ளிட்டோரும் பாஜக மீது விமா்சனங்களை முன் வைத்தனா். 

இதற்கிடையில், அதிமுக தலைமையை சமரசம் செய்வதற்கான முயற்சியில் பாஜக மேலிடத் தலைமை ஈடுபட்டு வந்தது. அதேசமயம், பாஜக குறித்தும், அதனுடனான கூட்டணி குறித்தும் எவ்வித விமா்சனங்களையும் பொதுவெளியில் வைக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் அதிமுக-தமிழக பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தில்லியில் முகாமிட்டுள்ளனர். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதிமுகவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கும் அண்ணாமலை குறித்தும் சந்திப்பில் பேச உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தில்லி சென்றுள்ள அதிமுக நிர்வாகிகளை சந்திக்க மத்திய அமைச்சர் அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை மட்டும் அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் சந்தித்தனர். 

ஏற்கெனவே அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்த நிலையில் தற்போது அதிமுக நிர்வாகிகளும் சந்திக்க சென்றிருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.