எஸ்ஐ தேர்வில் முறைகேடா? தேர்வர்கள் புகார்

காவல்துறை துணை ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தேர்வில் பங்கேற்றவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காவல்துறை துணை ஆய்வாளர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தநிலையில், தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தேர்வில் பங்கேற்றவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக இருந்த காவல் துணை ஆய்வாளர் பதவியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது.

இதற்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன. இந்த தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும், தேர்வு மையங்களில் இந்த முறைகேடு நடந்திருப்பதாகவும் தேர்வில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.

அதாவது, தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில், அடுத்தடுத்து தேர்வெழுதியவர்கள் தேர்ச்சி பெற்றதாக வெளியான தகவலின் அடிப்படையில்தான், இந்த புகார் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com