காவல்துறை துணை ஆய்வாளர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தநிலையில், தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக தேர்வில் பங்கேற்றவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக இருந்த காவல் துணை ஆய்வாளர் பதவியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது.
இதையும் படிக்க | 15 நாள்களில் 500 சாலைகள்: சாதிக்குமா சென்னை மாநகராட்சி?
இதற்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன. இந்த தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும், தேர்வு மையங்களில் இந்த முறைகேடு நடந்திருப்பதாகவும் தேர்வில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.
அதாவது, தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில், அடுத்தடுத்து தேர்வெழுதியவர்கள் தேர்ச்சி பெற்றதாக வெளியான தகவலின் அடிப்படையில்தான், இந்த புகார் எழுந்துள்ளது.