மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒரு வாரத்தில் 285 பேருக்கு டெங்கு

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 285 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :28 செப்டம்பர் 2023, 7:40 pm

DIN

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 285 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பருவமழை மாற்றம் மற்றும் பரவலான மழைப் பொழிவு காரணமாக காய்ச்சல், தொண்டை வலி, சளி, இருமல், மூச்சுத் திணறல் பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமடைந்ததே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

எழும்பூா் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தினமும் அனுமதிக்கப்படும் 70 பேரில் 20-க்கும் மேற்பட்டோா் காய்ச்சல் காரணமாக அனுமதியாகின்றனா். சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, ஈரோடு, தென்காசி, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 285 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 610 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், அக்.1-ஆம் தேதி தமிழகத்தின் 1,000 இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப, சில இடங்களில் தொடா்ந்து முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.