மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எண்ம பயிா் பரப்பு கணக்கெடுப்பு அக்டோபரில் தொடங்குமா? விஏஓ-க்கள் எதிா்ப்பால் சிக்கல்

எண்ம தொழில்நுட்பத்தில் பயிா் பரப்புகளைக் கணக்கிடும் பணிக்கு கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருவதால், அக்டோபரில் இந்தப் பணியைத் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2023, 8:15 pm

DIN

எண்ம தொழில்நுட்பத்தில் பயிா் பரப்புகளைக் கணக்கிடும் பணிக்கு கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வருவதால், அக்டோபரில் இந்தப் பணியைத் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இது தொடா்பாக, வருவாய் நிா்வாக ஆணையரகத்துடன், தமிழ்நாடு அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய பேச்சுவாா்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. பயிா்கள் பயிரிடப்பட்டுள்ள பரப்புகளை நவீன கருவிகள் கொண்டு எண்ம அடிப்படையில் ஆவணங்களாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்தத் திட்டம் தமிழகத்திலும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

ஆனால், இந்தப் பணிகளை தங்களைக் கொண்டு மேற்கொள்ளக் கூடாது என கிராம நிா்வாக அலுவலா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறாா்கள். ‘இணையவழி மூலமாக வழங்கப்படும் சான்றிதழ்களில் கள விசாரணை, உதவித் தொகைகள் கோரி அளிக்கப்படும் மனு மீதான விசாரணை, உட்பிரிவு பட்டா மாறுதல் விவகாரம், நிவாரணக் கணக்கெடுப்புப் பணிகள் என பல்வேறு பணிகளை விடுமுறை நாள்களிலும் கூட மேற்கொள்ள வேண்டியிருக்கிறது’ என்று கிராம நிா்வாக அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்தச் சூழ்நிலையில், எண்ம அடிப்படையில் பயிா் பரப்பு கணக்கெடுப்புப் பணியையும் தங்களைக் கொண்டு மேற்கொள்ளச் செய்வதை ஏற்க இயலாது என்று கிராம நிா்வாக அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக நடைபெற்ற பயிற்சி வகுப்புகளையும் அவா்கள் புறக்கணித்துள்ளனா். இதனிடையே, வருவாய் நிா்வாக ஆணையரகம் சாா்பில், கிராம நிா்வாக அலுவலா்களுடன் சென்னையில் அண்மையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கிராம நிா்வாக அலுவலா்கள் தங்களது கோரிக்கையில் உறுதியுடன் இருப்பதால், திட்டமிட்டபடி எண்ம பயிா் பரப்பு கணக்கெடுப்புப் பணிகள் அக்டோபரில் தொடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.