தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வருகிற ஆகஸ்ட் 25 முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து!
அதன்படி, தற்போது, 1,978 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் வருகிற ஆகஸ்ட் 25 முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், திருக்குவளையில் இந்த திட்டத்தினை தொடங்கிவைக்கிறார்.
இந்தத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் நகா்ப்புற, கிராமப்புறப் பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் 15 லட்சத்து 75 ஆயிரத்து 900 மாணவ, மாணவியா் பயன்பெறுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தோ்தல் நடத்தை விதி: கடலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

ரயில் பயணத்தில் அதிக சப்தத்துடன் பாடல் கேட்டால் அபராதம்

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் 55 ஆவது பாதுகாப்பு வார விழா நிறைவு
காரைக்குடியில் வீடு புகுந்து தங்க நகைகள், காா் திருட்டு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

