இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து கடந்த மாதம் 25-ஆம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள், கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்து கொண்டிருந்த போது ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் 9 பேரை கைது செய்தனர்.
அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் இன்று காலை 9 மீனவர்களையும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | மக்களாட்சியின் கறுப்பு நாள்; கொத்தடிமை இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்
இதனைத் தொடர்ந்து, 9 மீனவர்களையும் தமிழகம் அனுப்புவதற்கான பணிகளை அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 181 நபா்களுக்கு ரூ.1.86 கோடி கடன் வழங்க பரிந்துரை
ரூ. 2.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம்: மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்பட 4 போ் மீது வழக்கு

நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவா் பயிற்சி பெற ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்







