குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

திருவாரூரில் கன மழை: பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

திருவாரூரில் வியாழக்கிழமை அதிகாலையில் பெய்த கன மழை காரணமாக மரக் கிளை முறிந்து விழுந்ததுடன் இரண்டு மின் கம்பங்களும் சாய்ந்தன.

News image

கனமழை காரணமாக திருவாரூர் வடக்கு வீதி பிடாரி கோயில் தெருவில் பழமையான அரச மரத்தின் கிளை முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது.

Updated On :10 ஆகஸ்ட் 2023, 10:36 am IST


திருவாரூர்; திருவாரூரில் வியாழக்கிழமை அதிகாலை பெய்த கன மழை காரணமாக, மரக் கிளை முறிந்து விழுந்ததுடன் இரண்டு மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் வடக்கு வீதி, பிடாரிக் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

திருவாரூர், நன்னிலம், வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. குறிப்பாக நன்னிலத்தில் 5 சென்டிமீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

Story image

மின் கம்பிகள் மீது விழுந்து கிடக்கும் அரச மரத்தின் கிளை

இந்த கனமழை காரணமாக திருவாரூர் நகரத்திற்குட்பட்ட வடக்கு வீதி பிடாரி கோயில் தெருவில் பழமையான அரச மரத்தின் கிளை ஒன்று முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதன் காரணமாக திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலை ஓரத்தில் உள்ள இரண்டு இரும்பு மின் கம்பங்கள் சாய்ந்தன. 

இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக திருவாரூர் மின்சார வாரியத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்துள்ள மின்வாரியத்தினர் மின்கம்பிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடக்கு வீதி, பிடாரிக் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

Story image

திருவாரூரில் கன மழை காரணமாக மயிலாடுதுறை சாலை ஓரத்தில் சாய்ந்த மின் கம்பத்தை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்கள்.

மேலும், காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது. மரக்கிளை முறிந்து விழுந்த நேரம் அதிகாலை நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் ஏதும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.