திருவாரூரில் கன மழை: பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு
திருவாரூரில் வியாழக்கிழமை அதிகாலையில் பெய்த கன மழை காரணமாக மரக் கிளை முறிந்து விழுந்ததுடன் இரண்டு மின் கம்பங்களும் சாய்ந்தன.

கனமழை காரணமாக திருவாரூர் வடக்கு வீதி பிடாரி கோயில் தெருவில் பழமையான அரச மரத்தின் கிளை முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது.











