சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
சேப்பாக்கம், எழும்பூர், கிண்டி, ஆலந்தூர், மதுரவாயல், வானகரம். திருவேற்காடு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. புறநகர்ப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஆக.10) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: திமுகவின் குரலை கேட்டு பாஜக அரசு நடுங்குகிறது!
மேலும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.